தோழி
Posted ஜனவரி 30, 2012
on:தோழி |
உன்னோடு நானிருந்த காலம்
கோடையிலும் ஓர் வசந்தம்
பாலையிலும் ஓர் சோலைவனம்
பருவமடையா வயதில்
ரெட்டை ஜடையுடன்
கைகோர்த்து நடந்தது
ஒருகை இலந்தைப்பழத்தை
இருகைகள் பகிர்ந்துண்டது
டியூசன் வகுப்புகளுக்கு
துணையாய் வந்தது
யாரோ உன்னையடிக்க
எனக்கு கோபம்வந்தது
விடுமுறை நாட்களில் வந்த
இழந்தது போன்ற உணர்வு
அண்ணணை சாக்காய் வைத்து
உன்னைப் பார்த்தது
நட்பையும் தாண்டிய
நாகரீகப் பேச்சுகள்
இடையறாத பேச்சுக்களின்
நடுவே நீ காட்டும் மெளனம்
எல்லை தாண்டியபோதும்
நட்பாய் ஏற்றுக்கொண்டது
இவைகளை நினைத்தால்
இமைகளும் வலிக்கினறன
உடல்கள் நடுங்குகின்றன
கண்கள் குளமாகின்றன
ஆயிரம் வசந்தம்
ஆயிரம் கோடை
கடந்து விட்டேன்
நீயிட்ட கோலமட்டும்
மனதில் பசுமையாய்
நிழலாடுகிறது தோழி
உன் சுவடுகள் என் நெஞ்சில்
அதை ஒவ்வொருநாளும்
படிக்கிறேன் அழுகிறேன்
17 பதில்கள் to "தோழி"
கடந்த கால வசந்த நினைவுகள் அருமை !
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Arumaiyana varigal.. Aazhamana rasanai..
இளமைக் கோலங்கள் மறக்க முடியாதவைதான்.அருமை சகோ.வாழ்த்துக்கள். இன்னும் முயற்சி பண்ணுங்க. அருமையான கவிதைகள் உங்களிடமிருந்து வெளிவரும். வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நினைவும் படிமங்கள் வார்த்தைகளாய்.மனப்பாரம் கொஞ்சம் குறைந்திருக்கும் சகோதரன் !
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
மலரும் நினைவுகளோ – வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்க்கையின் இழப்புகளில் இது போன்றவைகள் தான் இன்னும் ரணங்களை கூட்டும் ..உங்களின் வரிகளில் தெரிகின்றது அனுபவிக்கும் வேதனை ..சுழலும் காலத்தில் நாம் சுமந்து நிற்கும் இந்த பசுமையான நினைவுகள் மட்டுமே மருந்தாக ..அழகிய படைப்புக்கு வாழ்த்துக்கள் தோழரே
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
மாப்ள மச்சான்கள் தான், true friends–னு சொல்லித்திரிபவர்களின் மத்தியில், தோழியைப் பற்றிய இக்கவிதை அழகு..!:):)
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
1 | sasikala
ஜனவரி 30, 2012 இல் 6:51 முப
ஆயிரம் வசந்தம்ஆயிரம் கோடைகடந்து விட்டேன்அருமையான வரிகள்